பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் திடீர் தள்ளிவைப்பு ஏன்?

பிப்ரவரி 14-க்கு பதில் 20-ம் தேதி நடக்கிறது
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்hindu

பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை,பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. உபியில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. பஞ்சாபில் பிப்ரவரி 16-ம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு தேர்தலை குறைந்தப்பட்சம் 6 நாட்களாவது ஒத்திவைக்கும்படி, அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தனர். பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளமும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. இந்நிலையில், பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in