
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பழைமையான அனல் மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல் மின் நிலையமும் ஒன்றாகும். நிலக்கரி அடிப்படையிலான இத்துறைமுகம், கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதில் உள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் இயங்கி வருகிறது. இதனால், இவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபட்டு வருகிறது. சில சமயம், தண்ணீர் மற்றும் நிலக்கரி உள்ளிட்டவைகளால் பற்றாக்குறையாலும் மின் உற்பத்தி தடைப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பஞ்சர் காரணமாக 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.