வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்: காவலர் உட்பட மூன்று பேர் சிக்கினர்!

வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்: காவலர் உட்பட மூன்று பேர் சிக்கினர்!

மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்திய காவலர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாநகர் கோ. புதூர், டி.ஆர்.ஒ காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, விபசார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த பெண் உள்ளிட்ட மூன்று பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமதி என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே விபச்சார வழக்கு உள்ளதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப வறுமையில் உள்ள ஏழை பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து வாடகை வீட்டை பிடித்து விபச்சாரத்தை ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. இவர்களுக்கு உடந்தையாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் கண்ணனேந்தலைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் செல்லூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காசி ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், சுமதி மற்றும் காவலர் தேவேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்து விபச்சாரம் நடத்தி வந்ததும், அதற்கு புரோக்கராக ஆட்டோ ஓட்டுனர் காசி செயல்பட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in