ஆபாச பேச்சு, பாலியல் தூண்டல்; எச்சரித்த மாணவி: சிக்கிய தனியார் இன்ஸ்டிடியூட் முதல்வர்

சித்தரிப்பு
சித்தரிப்பு

தன் இன்ஸ்டியூட்டில் பயிலும் 17 வயது மாணவியிடம் ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தென்காசி ஆசாத்நகரில் தனியார் கல்வி இன்ஸ்டிடியூட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த இன்ஸ்டிடியூட்டில் தென்காசி நடுப்பேட்டைத் தெருவைச் சேர்ந்த முகமது அன்சாரி(55) என்பவர் இங்கு முதல்வராக உள்ளார். இவர் அதே இன்ஸ்டிடியூட்டில் பயிலும் 17 வயது மாணவி ஒருவரிடம் பாலியல் நோக்கத்தோடு, இரட்டை அர்த்த வசனங்களில் பேசுவதும், பாலியல் உணர்வைத் தூண்டுவது போல் அவரிடம் பேசுவதையும் தொடர்ந்து செய்து வந்தார்.

மாணவி இதுகுறித்து எச்சரித்த போதும், முகமது அன்சாரி தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தநிலையில் மாணவி இதுகுறித்து தன் பெற்றோரிடம் சொல்லி அழுதார். இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் இதுதொடர்பாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் தனியார் இன்ஸ்டிடியூட் முதல்வர் முகமது அன்சாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in