வீடு தேடிச்சென்று வெட்டிக்கொல்லப்பட்ட பாமக பிரமுகர்: நிலத் தகராறில் நடந்த கொடுமை

திருஞானசம்பந்தம்
திருஞானசம்பந்தம்

நிலத்தகராறால் ஏற்பட்ட முன்விரோதம்  காரணமாக பாமக  பிரமுகர்  கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சோழபுரம் பகுதியில்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணத்தை அடுத்த சோழபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் திருஞானசம்பந்தம் (51), விவசாயியான இவர், பாமக முன்னாள் பேரூர்  தலைவராக பதவி வகித்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.  இவருக்கும், இவரது வீட்டின் அருகிலுள்ள ராஜேந்திரன் என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. 

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், திருஞானசம்பந்தத்தை,  ராஜேந்திரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள்  தாக்கியுள்ளனர். இது குறித்து  திருஞானசம்பந்தம் கொடுத்த புகாரின் பேரில் சோழபுரம் போலீஸார், வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர்.  பின்னர், இவர்கள், நிபந்தனை ஜாமீன் முடிந்து அண்மையில் வெளிவந்தனர்.  

இந்த நிலையில் ஊரில் இருந்த  திருஞானசம்பந்தத்தை இன்று காலை ராஜேந்திரன் மற்றும் சிலர் தேடிச்சென்று  அரிவாளால் வெட்டினர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

இதில் பலத்த காயங்களுடன்  கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திருஞானசம்பந்தம்  வழியிலேயே  உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சோழபுரம் போலீஸார், அவரது உடலை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து  வழக்கு பதிந்து தலைமறைவாகியுள்ள ராஜேந்திரன் மற்றும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்த திருஞானசம்பந்தத்தின் உறவினர்கள், சோழபுரம் போலீஸார், உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து மருத்துவமனை வாயிலிலும், சோழபுரம் கடைத்தெருவிலும் சாலை மறியலில் இறங்கினர்.  கொலை செய்த  ராஜேந்திரன் மற்றும் அவருடன் உள்ளவர்களை  உடனடியாக  கைது செய்ய வலியுறுத்திய அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in