
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியை பிரதமர் மோடி டாஸ் போட்டு தொடங்கி வைக்கிறார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பானிஸும் நேரில் பார்க்க உள்ளனர். இந்தப்போட்டியை பிரதமர் மோடி டாஸ் போட்டுத் தொடங்கி வைக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டியில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது.