பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடி விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை அருகே குரோம்பேட்டை ராஜேந்திராபுரம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் லட்சுமிஸ்ரீ(17) என்ற மாணவி பிளஸ் 2 படித்து வந்தார்.
இன்று பள்ளியில் சுதந்திர தினவிழாவில் பங்கேற்று விட்டு சைக்கிளில் லட்சுமிஸ்ரீ வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பொழிச்சலூரிலிருந்து அஸ்தினாபுரம் சென்ற அரசு பேருந்து லட்சுமிஸ்ரீ மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
சுதந்திர தினவிழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.