நாளை வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: அரசு தேர்வுகள் துறை முக்கிய அறிவிப்பு

நாளை  பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்நாளை வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: அரசு தேர்வுகள் துறை முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை(மே 8) வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகள் அன்றைய தினமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் 13-ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஏப். 3-ம் தேதி நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 4,33,000 மாணவிகளும், 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும், 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் எழுதினர். 8.50 லட்சம் மாணவர்கள். பங்கேற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இம்முடிவுகளை நாளை காலை 9.30 மணியளவில் வெளியிடுகிறார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை நாளைய தினமே பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in