பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு - எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

பிளஸ் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடுபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு - எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தை ராணிப்பேட்டை மாவட்டம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 8,03,385 மாணாக்கர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அதிகளவில் மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் மாவட்ட வாரியாக மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் வெளியாகியுள்ளது. அதில் கடந்த ஆண்டு 97.95% மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்து முதலிடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 97.85% மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் 97.79 சதவீதத்துடன் திருப்பூர், மூன்றாம் இடத்தில் 97.59% பெற்று பெரம்பலூர், நான்காம் இடத்தில் 97.57% பெற்று கோவை, ஐந்தாம் இடத்தில் 97.36% பெற்று தூத்துக்குடி இடம் பிடித்துள்ளது. அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் இருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 87.30% மாணாக்கர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது. அடுத்தது வேலூர் 89.20% , கிருஷ்ணகிரி 89.69% மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளை சேர்ந்த 89.80% மாணாக்கர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99% பேரும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.08% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வெழுதிய சிறைவாசிகள் 90 பேரில், 79 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in