இந்திய ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விமானி பலி

இந்திய  ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விமானி பலி

அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு விமானி படுகாயமடைந்தார்.

அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள தவாங் மாவட்டத்தில் இன்று இந்திய ராணுவ ஹெலிகாப்டரில், இரண்டு விமானிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த ராணுவத்தினர், சம்பவ இடத்துக்குச்சென்று, விமானிகளை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் படுகாயமடைந்த விமானிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு விமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியா-திபெத் எல்லையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இது எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ஆயுதப் படைகளுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in