`நீங்கள் செய்ததை எங்கள் வாழ்நாளில் மறக்கமாட்டோம்'- முதல்வரை சந்தித்த நரிக்குறவர் மக்கள் உருக்கம்!

`நீங்கள் செய்ததை எங்கள் வாழ்நாளில் மறக்கமாட்டோம்'- முதல்வரை சந்தித்த நரிக்குறவர் மக்கள் உருக்கம்!

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி நிறைவேற்ற உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினை நரிக்குறவர் இன மக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் நரிக்குறவன், குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி கவனத்தை ஈர்த்து, முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-3-2022 அன்று கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், நரிக்குறவன், குருவிக்காரன் சமூகம் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்றும் எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நரிக்குறவன், குருவிக்காரன் சமூகத்தினரை தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே, நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலினை நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்தித்து, நரிக்குறவர் இன மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, பழங்குடியின தகுதி பெற்றுத் தந்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். அப்போது, `நீங்கள் செய்ததை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்' என்று அவர்கள் உருக்கமாக கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in