டிராக்டர் கலப்பையில் சிக்கி 3 துண்டுகளான சிறுவன்: அழுகையை நிறுத்த வேடிக்கை காட்டிய போது நடந்த விபரீதம்

டிராக்டர் கலப்பையில் சிக்கி 3  துண்டுகளான  சிறுவன்:  அழுகையை நிறுத்த வேடிக்கை காட்டிய போது நடந்த விபரீதம்

ஆந்திராவில் டிராக்டர் கலப்பையில் சிக்கி ஒன்றரை வயது சிறுவன் மூன்று துண்டுகளாகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் காளகஸ்தியில் உள்ள வேடாம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனிச்சந்திரா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராதாவிற்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு உறவினர் மகேஷைப் பார்க்க ராதா நேற்று சென்றுள்ளார். அப்போது தனது நிலத்தில் டிராக்டரில் ரோட்டாவேட்டர் கலப்பை இணைத்து உழவுப் பணியில் மகேஷ் ஈடுபட்டிருந்தார். ராதாவின் கையில் இருந்த குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பார்த்த மகேஷ், குழந்தையின் அழுகையை நிறுத்த, டிராக்டரில் உட்கார வைத்துள்ளார்.

பின்னர் குழந்தை டிராக்டரில் அமர்ந்து இருந்ததை மறந்து போன மகேஸ், டிராக்டரை வேகமாக ஒட்டியுள்ளார். இதில் குழந்தை திடீரென்று கீழே சேற்றில் விழுந்து. அப்போது சுழலும் ரோட்டோவேட்டர் கலப்பையில் சிக்கிய குழந்தை மூன்று துண்டுகளாக உடல் சிதறி பரிதாபமாக பலியானது. இந்த தகவல் அறிந்த காளகஸ்தி புறநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிராக்டர் கலப்பையில் சிக்கி ஒன்றரை வயது சிறுவன் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in