இரண்டு நாட்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட்: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இரண்டு நாட்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட்: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக் கூடும் எனவும், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் நீர்நிலை வழியாக பயணம் செய்யும் போது எச்சரிக்கையாக இருந்தால் பெரும்பாலான விபத்துகள் தவிர்க்கப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in