முந்திரி பருப்பு வாங்க ஏற்றுமதி நிறுவனத்திடம் 26,866 அமெரிக்க டாலர் லஞ்சம்: குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு

முந்திரி பருப்பு வாங்க ஏற்றுமதி நிறுவனத்திடம் 26,866 அமெரிக்க டாலர் லஞ்சம்: குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு

கொண்டைக்கடலை மற்றும் முந்திரி பருப்பு இறக்குதி செய்ய லஞ்சம் பெற்றவருக்கு, முன் ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தைச் சேர்ந்த அன்சியோ (ANSIO) இந்தியா என்ற தனியார் நிறுவனம் தான்சானியாவிலிருந்து கொண்டைக்கடலை மற்றும் முந்திரி பருப்பு இறக்குமதி செய்வதற்காக சாய் சூர்யா ஏற்றுமதி நிறுவனத்திடம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் அமெரிக்க டாலர்களுக்காக தொகையை வங்கி மூலம் பண பரிமாற்றம் செய்தது.

பணப்பரிமாற்றம் செய்யப்பட்டும் பொருட்கள் வராதது  தொடர்பாக அன்சியோ நிறுவனம் தரப்பில் சென்னை காவல் துறையில் புகார் அளித்தது. அந்த புகாரில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டபோது தங்கள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த எஸ்.ஆர்.ராமசுப்பிரமணியன் என்பவர் சாய் சூர்யா நிறுவனத்திடம் 26,866 அமெரிக்க டாலரை லஞ்சமாக பெற்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில், ராமசுப்ரமணியன், சாய் சூர்யா நிறுவனத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் மீது  சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராமசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து அன்சியோ நிறுவனம் தரப்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு மனுக்களும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை விளக்கம் அளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in