
அடுத்த ஆண்டு 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்களை மட்டுமே நிரப்புவதாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல தகவல் பரவியது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், இந்த செய்தி உண்மை இல்லை என்று மறுத்துள்ளது. ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் முழுமையாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.