கேரளத்திலிருந்து கோவை வழியாக பெங்களூருக்கு ஓணம் சிறப்பு ரயில் இயக்கம்: முன்பதிவு தொடங்கியது!

கேரளத்திலிருந்து கோவை வழியாக பெங்களூருக்கு ஓணம் சிறப்பு ரயில் இயக்கம்: முன்பதிவு தொடங்கியது!

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் இருந்து கோவை வழியாக பெங்களூருவுக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

சேலம், கேரள மாநிலம் கொச்சுவேலி- பெங்களூரு (பையப்பனஹள்ளி) சிறப்பு ரெயில் (06037) கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நாளை (ஆகஸ்ட் 12) அதிகாலை 4.30 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

பின்னர் இங்கிருந்து 4.33 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக நாளை மறுநாள் (ஆகஸ்ட் 14) காலை 10.10 மணிக்கு பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையம் சென்றடைகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06038) பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் இருந்து நாளை (ஆகஸ்ட் 12) பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக இரவு 7.05 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் இங்கிருந்து 7.08 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக நாளை மறுநாள் காலை 6.35 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in