திருமணமான ஐந்து நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை

பிரசாத்
பிரசாத்

திருமணம் ஆன ஐந்தே நாளில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது இரு வீட்டாரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள கோயில் சன்னாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் (30). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதால் ஊர் திரும்பியிருந்தார்.

இவருக்கு கடந்த ஐந்தாம் தேதி பந்தநல்லூர் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. இந்த நிலையில் திருமணமானதால் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய பிரசாத் சோகத்துடன் காணப்பட்டிருக்கிறார். கடந்த இரண்டு தினங்களாக மனைவியுடன் சரியாக பேசாமல் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனைப் பிரசாத் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இன்று கறிவிருந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்ட பிரசாத், யாரும் எதிர்பாராத விதமாக தூக்குப் போட்டு கொண்டார். ஒரு கதவைத் சாத்திக் கொண்டதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவது தெரிந்தது. உடனடியாக அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே பிரசாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருவிடைமருதூர் போலீஸார், பிரசாத் தற்கொலைக்கான காரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஐந்தே நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டு இறந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in