ஆட்டோவில் 15 சவரன் நகையைத் தவறவிட்ட மூதாட்டி; பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

ஆட்டோ ஓட்டுநர் கிஷோர்
ஆட்டோ ஓட்டுநர் கிஷோர்ஆட்டோவில் 15 சவரன் நகையைத் தவறவிட்ட மூதாட்டி; பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

பேரம் பேசிக் கொண்டே 15 சவரன் தங்க நகைகளைத் தவறவிட்ட மூதாட்டியிடம், உரிய நேரத்தில் நகைகளை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் வெகுவாக பாராட்டினர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சபுராயீ. 63 வயதான இவர். நேற்று இரவு வண்ணாரப்பேட்டையில் துணிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்வதற்காக ஆட்டோ பேரம் பேசியுள்ளார். கையில் வைத்திருந்த பையை மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டுள்ளார்.

பேரம் ஒத்து வராததால் ஆட்டோ ஓட்டுநர் சென்ற நிலையில், சட்டென்று சுதாரித்த சபுராயீ, கையில் வைத்திருந்த பையைக் காணவில்லை எனக் கத்தி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை இராயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளிக்க வைத்துள்ளனர்.

புகாரைப் பெற்றுக் கொண்டு போலீஸார் சிசிடிவி கேமரா மூலம் ஆட்டோ பதிவெண் மூலம் ஆட்டோ ஓட்டுநரை அடையாளம் கண்டு அவருக்குத் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட போது அந்த ஆட்டோ ஓட்டுநர் மூதாட்டியின் பையுடன் அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் கிஷோரிடம் பேசிய போலீஸார் அவரை ராயபுரம் காவல் நிலையத்திற்கு வரவழைத்து மூதாட்டியிடம் 15 சவரன் நகை வைத்திருந்த பையைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். பத்திரமாக நகைகளுடன் பை போலீஸில் ஒப்படைக்க முனைந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் பாராட்டினர். அதேபோலத் துரிதமாக நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டுக் கொடுத்த போலீஸாரை மூதாட்டி வெகுவாகப் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in