வானிலை
தேசம்
மக்களே உஷார்... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!
வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இதனால் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அவர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மற்றும் அரபிக்கடலில் புயல் காரணிகளால் தமிழகத்தில் மழை தீவிரமடையும் என்று கூறியுள்ளார்.