ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும்
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும்ஆதார் இணைக்காத பான் கார்டு செல்லாது: காலக்கெடு அறிவிப்பு

ஆதார் இணைக்காத பான் கார்டு செல்லாது: காலக்கெடு அறிவிப்பு

ஆதாருடன் பான் கார்டை மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் (PAN) எண்ணை வருமான வரித்துறை வழங்கி வருகிறது. நாட்டில் வருமானம் பெரும் அனைவருக்கும் இந்த பான் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

வருமான வரிச் சட்டம், 1961- ன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். அதன்படி அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வீடில்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர்.

எனவே, இவர்களைத் தவிர மற்றவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். 2023 மார்ச் 31-ம் தேதிக்கு முன் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என வருமானத்துறை அறிவுறுத்தியுள்ளது. 2023 ஏப்.1 -ம் தேதி முதல், இணைக்கப்படாத பான் எண் செயலிழக்கும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு செயல் இழந்தால் அதை இணைத்து உருவாக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் முடங்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in