எங்கள் ஊரில் கிங்பிஷர் பீர் கிடைக்கவில்லை: மாவட்ட ஆட்சியருக்கு வந்த வினோத கடிதம்!

கிங்பிஷர் பீர்
கிங்பிஷர் பீர்எங்கள் ஊரில் கிங்பிஷர் பீர் கிடைக்கவில்லை: மாவட்ட ஆட்சியருக்கு வந்த வினோத கடிதம்!

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நகரத்தில் கிங்பிஷர் பீர் கிடைக்கவில்லை என்று தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தெலங்கானாவில் நடந்த ஒரு வினோதமான சம்பவத்தில், ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராஜேஷ் என்ற நபர், தங்கள் ஊரில் கிங்பிஷர் பீர் கிடைக்கவில்லை என்ற மனுவை தாக்கல் செய்து, பொது வானொலி நிலையமான பிரஜாவானியில் தனது புகாரை எழுப்பினார். அவர், தனது ஊரில் உள்ளவர்கள் மலிவான மதுபானங்களை உட்கொண்டு, அவர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுவதால், இந்த பிரச்சினையை எழுப்புவதாகக் கூறினார். மேலும், மதுப்பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுவைப் பெற ஆசைப்பட்டு, அதை வாங்குவதற்கு தொலைதூர இடங்களுக்கு வாகனங்களில் செல்வதால் விபத்துக்கள் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார். எனவே, அனைத்து உள்ளூர் ஒயின் ஷாப்களிலும் 'கேஎப்' பீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு ராஜேஷ் கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in