ஊட்டி மலை ரயிலுக்கு பொன்மலையில் உருவானது புது என்ஜின்!

ஊட்டி மலை ரயிலுக்கு பொன்மலையில் உருவானது புது என்ஜின்!

ஊட்டியில் இயங்கி வரும் மலை ரயிலுக்கு ஒரு புது என்ஜினை தயாரித்து பொன்மலை ரயில்வே பணிமனை சாதனை படைத்துள்ளது. 

ஊட்டி மலை ரயில் மற்றும் அதற்கான என்ஜின் ஆகியவை திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டவையே ஆகும்.  இங்கு தயாரிக்கப்பட்ட நான்கு என்ஜின்கள் தற்போது  அங்கு ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது அந்த என்ஜின்களில் இருந்து மாறுபட்ட புதிய என்ஜினை  தயாரித்து ஊட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது பொன்மலை ரயில்வே பணிமனை.

தற்போது ஊட்டி மலை ரயிலில் இயங்கி வரும்  4 என்ஜின்களும்  நிலக்கரியில் ஓடினாலும் அவற்றை இயக்கத் தொடங்கும்போது ஏதாவது எண்ணெய்யை பயன்படுத்தியே ஆக  வேண்டும். இதற்காக உலை ஆயில் (ஃபர்னஸ் ஆயில்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜினை ஆன் செய்யும் போது, அதிகளவில் புகை எழும்பும். அதனால் அதற்கு மாற்றாக என்ன செய்வது என்று யோசித்து இந்த புதிய எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலை ஆயிலுக்கு மாற்றாக அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் இந்த  ரயில் என்ஜின் தயாராகியுள்ளது. இதன் மூலம் அதிக புகை மற்றும் சத்தம் எழும்பாமல் சுற்றுச்சூழல்  கெடாமல் பாதுகாக்க முடியும்.  இதில், என்ஜினை ஆன் செய்ய பயன்படுத்தும் அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளவுள்ள டீசல் டேங்க் மற்றும் நிலக்கரி மூலம் நீராவி உருவாக்க கொதிக்க வைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் நிரப்பி வைக்க 4,500 லிட்டர் கொள்ளவுள்ள 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் ரயில் என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், அதேபோல என்ஜினின் உள்பகுதியிலும் எல்இடி பல்புகளும் உள்ளது. இந்த சிறப்பு ரயில் என்ஜின் 9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினர், கடந்த பிப்ரவரி தொடங்கி 7 மாதங்களில் வடிவமைத்துள்ளனர். இந்த என்ஜின் இயக்கத்துக்கு பின்னர் இதில் காணப்படும் நிறை குறைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த ரயில் என்ஜின்களும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

புதிய என்ஜினுக்கான அனைத்து வேலைகளும் இறுதி செய்யப்பட்ட நிலையில் மலை ரயில் பயன்பாட்டுக்காக பொன்மலையில் இருந்து லாரியில் ஏற்றி ஊட்டிக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in