`நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டம்: ஒருநாள் ஊதியத்தை வழங்கிய தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்

நம்ம ஸ்கூல் பவுண்டேசன்
நம்ம ஸ்கூல் பவுண்டேசன் `நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டம்: ஒருநாள் ஊதியத்தை வழங்கிய தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்

அரசுப்பள்ளியை மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு ஒரு நாள் ஊதியத்தை ஐஏஎஸ் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

தனியார் அமைப்புகள் மற்றும் நபர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசும் இணைந்து, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ என்ற திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர், ``எல்லா முன்னேற்றத்தையும் அரசே முழுமையாக செய்வது இயலாத ஒன்று. இதற்கு மக்களும் கைகோர்த்து முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழ அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

இந்த நிலையில் திட்டத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் மார்ச் மாத ஊதியத்திலிருந்து ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் முடிவெடுத்திருக்கிறார்கள். அதிகாரிகளின் இந்த முடிவு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், அரசுப்பள்ளிகளை மேம்படுத்த உதவி செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல் நாளே 50 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in