பெண்ணை ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்டவர் கொலை: தந்தைக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்டவர் கொலை: தந்தைக்கு ஆயுள் தண்டனை

பெட்டிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கைலாசம் தெருவில் வசித்து வந்த பெருமாள் என்பவர் தனது குடியிருப்பு முன் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பெருமாளின் கடையில் உட்கார்ந்திருந்த ஆனந்தியை அவரது தந்தை ஏழுமலை ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதனை பெருமாள் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த ஏழுமலை, பெருமாளிடம் தகராறு செய்துள்ளார். அங்கிருந்து சென்ற ஏழுமலை சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பெருமாளை கத்தியால் குத்திக்கொலை செய்ததுடன், தடுக்க வந்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக தண்டையார்பேட்டை போலீஸார் பதிவு செய்த வழக்கை விசாரித்த சென்னை 18-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழுமலை மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in