கம்பியால் தம்பியின் தலையை உடைத்த அண்ணன்: சொத்துக்காக நடந்த கொடூரம்

கொலை
கொலை

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் சொத்து தகராறில் தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ள சூரங்குடி வடக்குசெவல் காலணியைச் சேர்ந்தவர் சேதுராமன்(36) பனைத் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், இவரது சகோதரர் ராமநாதனுக்கும்(38) இடையே சொத்துப் பிரச்சினை இருந்துவந்தது. இதுதொடர்பாக இவர்கள் இருவருக்கும் இடையில் வீட்டில் இருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராமநாதன், தன் தம்பி சேதுராமன் தலையில் வீட்டில் இருந்த கம்பியால் ஓங்கி அடித்தார். இதில் சேதுராமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார். சேதுராமன் ஏற்கெனவே தன் மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த இரு ஆண்டுகளாகவே அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் சூரங்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதுராமன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது சகோதரர் ராமநாதனைக் கைது செய்தனர்.

சொத்துப் பிரச்சினையில் தம்பியை அண்ணனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in