மனைவியுடன் தகராறு: தடுக்க முயன்ற மாமியாரைக் கட்டையால் தாக்கிக் கொன்ற மருமகன்

மனைவியுடன் தகராறு: தடுக்க முயன்ற மாமியாரைக் கட்டையால் தாக்கிக் கொன்ற மருமகன்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தடுக்க முயன்ற மாமியாரைக் கட்டையால் தாக்கி கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்ன வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பிரேம்குமார் (30). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஆனந்தன்-ஹேமாவதி தம்பதியின் மகளான உஷா என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரேம்குமாருக்கும், உஷாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பாக சாப்பிடும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் உஷாவை பிரேம் குமார் தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த உஷா அருகே உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதனால் அவரை சமாதானம் செய்து மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருவதற்காக பிரேம்குமார் மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் உஷா அவருடன் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதைக் கண்ட மாமியார் ஹேமாவதி பிரேம்குமாரை தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது கடும் கொந்தளிப்பிலிருந்த பிரேம்குமார் கையில் வைத்திருந்த கட்டையால் மாமியாரைச் சரமாரியாகத் தாக்கினார். தலையில் ரத்தம் வடிந்த நிலையில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதன் பின்பு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் ஹேமாவதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனிற்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து உஷா கொடுத்த புகாரின் பேரில், அவரது கணவர் பிரேம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in