அதிக மாத்திரைகளைச் சாப்பிட்டு தாய், மகன் தற்கொலை: அதிர்ச்சி தரும் பின்னணி

அதிக மாத்திரைகளைச் சாப்பிட்டு தாய், மகன் தற்கொலை: அதிர்ச்சி தரும் பின்னணி

நெல்லையில் தன் மனைவி பிரிந்து சென்ற துயரில் கணவர் அதிகளவில் மாத்திரைகளைச் சாப்பிட்டு உயிரிழந்தார். அதைப் பார்த்த தாயும் அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் சிகிச்சையில் இருந்த தாயும் இன்று உயிர் இழந்தார். மருமகள் பிரிந்து சென்றதால் கணவர், மாமியார் என இருவரும் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகில் உள்ள மேலச்சடையான்குளம் மறவர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(25). கட்டுமானத் தொழிலாளியான இவருக்கு செய்துங்கநல்லூர் அருகில் உள்ள உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 22-ம் தேதி உமாவுக்கும், மணிகண்டனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு உமா தன் மகளையும் அழைத்துக்கொண்டு தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இதனால் மனம் உடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த ஏராளமான மாத்திரைகளை எடுத்து ஒன்றாகச் சாப்பிட்டார். இதைப் பார்த்த மணிகண்டனின் தாய் மீனாவும் தன் மகனின் நிலையை நினைத்து கலங்கியவாறே அதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டார். இதில் நேற்று மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மீனா இன்று உயிர் இழந்தார். மருமகள் பிரிந்து சென்ற சம்பவத்தின் எதிரொலியாக தாய், மகன் பலியான சம்பவம் குறித்து பத்தமடை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in