மயானத் தொழிலாளி நள்ளிரவில் படுகொலை: மதுரையில் பயங்கரம்

மயானத் தொழிலாளி நள்ளிரவில் படுகொலை: மதுரையில் பயங்கரம்

மயானத் தொழிலாளியாக பணியாற்றி வந்த நபரை நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்து தப்பியோடிய மர்ம கும்பலைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், பொன்மேனியில் உள்ள ஜெய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான அய்யனார். மயானத் தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர், நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் ஜெய் நகர் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மது போதையில் வந்ததாக கூறப்படும் மர்ம நபர்கள் சிலர் அய்யனாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in