அடுத்த 2 வாரங்களுக்கு பருவமழை எப்படி இருக்கும்?: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அடுத்த 2 வாரங்களுக்கு பருவமழை எப்படி இருக்கும்?: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்," நவம்பர் 17 முதல் 23-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இயல்பைவிட 91 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 16 மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் மழையளவு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான 2 மாதங்களில், இயல்பைவிட 4 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in