டெல்லியில் குரங்கு அம்மைக்கு தனி வார்டு; மக்கள் பீதியடைய வேண்டாம்: முதல்வர் அறிவுறுத்தல்

டெல்லியில் குரங்கு அம்மைக்கு தனி வார்டு; மக்கள் பீதியடைய வேண்டாம்: முதல்வர் அறிவுறுத்தல்

டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்ட நிலையில், மக்கள் அதைப்பற்றி பீதி அடைய வேண்டாம் என அம்மாநில மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு கேரளத்தில் மூன்றுபேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் இதுவரை குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள் தான். ஆனால் இப்போது டெல்லியில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டிருப்பவர் எந்த வெளிநாட்டிற்கும் செல்லாதவர் என்பது அதிர்ச்சியளித்துள்ளது.

31 வயதான அந்த நபர், வெளிநாட்டுக்கு செல்லாத நிலையில், நோய் தொற்றியது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சிறப்புக்கவனம் செலுத்தி கவனித்து வருகிறது. குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்டிருக்கும் அந்த நபர். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்து வருகிறார். இப்போது நலமுடன் உள்ளார். டெல்லி மக்கள் பீதியடையத் தேவையில்லை. நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது. குரங்கு அம்மைக்கு லோக்நாயக் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டை அமைத்துள்ளோம். நோய் பரவலைத்தடுக்கும் வகையில் சுகாதாரக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in