வெடித்து சிதறியது காரின் டயர்; பறிபோன தாய், மகன் உயிர்: அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்

வெடித்து சிதறியது காரின் டயர்; பறிபோன தாய், மகன் உயிர்: அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளாகி தாய் - மகன் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, இன்று மாலை விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது காரின் டயர் திடீரென வெடித்தது. இதில், நிலைதடுமாறிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் காரை ஓட்டி வந்த ஆனந்த் மற்றும் அவரது தாய் மீனா ஆகியோர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in