44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி!

44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இந்த போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் பிரதமர் மோடியிடம், செஸ் ஒலிம்பியாட் சுடரை ஒப்படைத்தார்.

இதை அடுத்து அந்த ஜோதியை பிரதமரிடம் இருந்து கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பெற்றுக் கொண்டார். இந்த ஜோதி 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் ஜூலை 28-ம் தேதி அன்று தமிழகத்தை அடையும் இந்த ஜோதி, முதல்வர் ஸ்டாலின் கரங்களில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் போட்டி தொடங்குகிறது.

இந்த ஜோதி ஓட்டம் இனிவரும் செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in