மோடி உண்மையை மறைக்க கடுமையாக முயற்சிக்கிறார்... மல்லிகார்ஜுன கார்கே கடும் குற்றச்சாட்டு!

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
Updated on
1 min read

தற்போது ஜி-20 மாநாடு முடிந்துள்ள நிலையில், மோடி அரசு உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில், பொதுவான ஒரு சாப்பாடுடைய விலை 24% அதிகரித்துள்ளது. வேலையின்மை நாட்டில் வேலையின்மை விகிதம் 8% அதிகரித்து இளைஞர்களின் எதிர்காலம் இருண்டுள்ளது. ஊழல்கள் மோடி அரசின் தவறான நிர்வாகம் ஊழலுக்கு வழி வகுத்துள்ளது, சிஏஜி பல அறிக்கைகளில் பாஜகவை அம்பலப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ரூ.13,000 கோடி ஜல் ஜீவன் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் ஒரு தலித் ஐஏஎஸ் அதிகாரி ஊழலை அம்பலப்படுத்தியதால் அவரை சித்ரவதை செய்துள்ளனர்.

கொள்ளை: பிரதமரின் உற்ற நண்பரின் கொள்ளை சமீபத்தில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2019 தேர்தலுக்கு முன்னதாக ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் இருந்து ரூ.3 லட்சம் கோடியை மோடி அரசுக்கு மாற்ற வேண்டும் என்ற அரசின் அழுத்தத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா எதிர்த்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சோகம்: மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை தலை தூக்கியுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

இமாச்சல பிரதேசத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் திமிர் பிடித்த மோடி அரசு அதை தேசிய பேரிடராக அறிவிப்பதை தவிர்த்து வருகிறது. இத்தனைக்கும் மத்தியில், மோடி உண்மையை மறைக்க கடுமையாக முயற்சிக்கிறார். ஆனால் மோடி அரசு, கவனத்தை சிதறடிக்கும் பிரச்சினைகளுக்கு பதிலாக உண்மையைக் கேட்கவும் பார்க்கவும் வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள். மோடி அரசு கவனமாகக் கேட்க வேண்டும். 2024ல் நீங்கள் புறப்படுவதற்கான பாதையை பொதுமக்கள் அமைக்கத் தொடங்கியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in