சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜோதிடருக்கு 20 ஆண்டு சிறை

நீதிமன்றம்
நீதிமன்றம்சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜோதிடருக்கு 20 ஆண்டு சிறை

ராஜபாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கலங்காபேரியைச் சேர்ந்த ஜோதிடர் பழனிச்சாமி (63). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் ராஜபாளையம் மகளிர் போலீஸார் போக்சோவில் வழக்கு பதிந்து பழனிச்சாமியை கைது செய்தனர். கடந்த 2020 செப்டம்பரில் நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழனிச்சாமிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in