பாலியல் தொல்லைக் கொடுத்த தோழியின் தந்தை: சிறுமி எடுத்த விபரீத முடிவு

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லைபாலியல் தொல்லை கொடுத்த தோழியின் தந்தை: சிறுமி எடுத்த விபரீத முடிவு

ஆக்ராவில் தனது தோழியின் தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததால், விரக்தியடைந்த சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆக்ரா அருகிலுள்ள எட்மத்பூர் நகரைச் சேர்ந்த சிறுமிக்கு, அவருடைய தோழியின் தந்தை ராகவேந்திர சிங் சவுகான் தொலைபேசியில் தொடர்ந்து ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது குடும்பத்தினரிடம் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனாலும் பாலியல் தொல்லை தொடர்ந்த காரணத்தால், விரக்தியில் அந்த சிறுமி மார்ச் 13 அன்று தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய தானா கந்தௌலி காவல்துறை அதிகாரி என்கே மிஸ்ரா, “ தனது மகளின் தோழியின் தந்தை, தொடர்ந்து தொலைபேசியில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக உயிரிழந்த சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் யமுனா விரைவுச்சாலை அருகே கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in