சொத்துத் தகராறில் உறவினரைக் கொலை செய்துவிட்டு கொலையாளிகள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அபிராமபுரம் படவட்டான் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபரி பொன்ராஜிக்கும், உறவினர் அற்புதராஜிக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், பொன்ராஜ் வீட்டிற்கு உறவினர் அற்புதராஜ் உள்பட 3 பேர் நேற்று இரவு சர்வ சாதாரணமாக சென்றுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அற்புதராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொன்ராஜை சரமாரியாக குத்தினார். இதில் பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன் பின்பு அற்புதராஜ், நடந்த சம்பவங்களை தனது மனைவிக்கு போன் மூலம் கூறிவிட்டு தலைமறைவாகினார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உறவினர் பொன்ராஜ் உட்பட 3 பேர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் கொலை செய்து விட்டு, அற்புதராஜ் உள்பட 3 பேர் தப்பியோடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதை வைத்து காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.