சென்னை பேருந்துகளில் சில்மிஷ ஆண்கள் ஜாக்கிரதை: பெண்களைக் காக்க சிறப்பு ஏற்பாடு

சென்னை பேருந்துகளில் சில்மிஷ ஆண்கள் ஜாக்கிரதை: பெண்களைக் காக்க சிறப்பு ஏற்பாடு

சென்னை மாநகர பேருந்துகளில் பெண்களை ஆண்கள் உரசினாலோ, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டாலோ அவரச பட்டனை அழுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரில் மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணம் செய்யம் பயணிகளுக்கு தமிழக அரசு பல்வேறு வசதிகளைச் செய்து வருகிறது. பயணம் செய்ய விரும்பும் பேருந்து எந்த இடத்தில் வருகிறது, எப்போது வரும் என்பதை அறிய சலோ செயலி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பஸ்களில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. பஸ்களில் பயணம் செய்யும் ஆண்கள், உரசினாலோ, பாலியல் தொல்லை கொடுத்தாலோ இந்த அவசர பட்டனை பெண்கள் அழுத்தலாம். அதன் மூலம் அந்தஆண்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களிலும், பஸ்களிலும் மகளிர் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியுடன், மாநகர போக்குவரத்து கழகமும் இணைந்து இன்றும், நாளையும் இந்த செயலி குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

இந்த விழிப்புணர்வு பிரசாரம் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், பிராட்வே, திருவான்மியூர், கிண்டி ஆகிய மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் இன்று நடந்தது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் அவசர பட்டன்களை எப்படி பயன்படுத்துவது, அரசு உதவி எண்களை எப்படி கையாள்வது என்பது குறித்து விளக்கப்பட்டது. நாளையும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in