இளம்பெண்ணுடன் தனிமையில் இருக்கும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்: புகாருக்குள்ளான நிலையில் வைரலாகும் வீடியோ

இளம்பெண்ணுடன் தனிமையில் இருக்கும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்: புகாருக்குள்ளான நிலையில் வைரலாகும் வீடியோ

பாலியல் புகாருக்குள்ளான நிலையில் இளம்பெண்ணுடன் தனிமையில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரின் வீடியோவால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டம் சார்ந்த துறையில் பணியாற்றி வருபவர் சதீஷ்குமார். இவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக மாணவிகளிடம் இருந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவள்ளிக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி முதல்வர், மூன்று மருத்துவர்கள் அடங்கிய விசாரணை குழுவை அமைத்தார். இந்தக்குழு மாணவிகளிடமும் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் சதீஷ்குமாரிடமும் விசாரணை செய்தது. இதன் அடிப்படையில் சதீஷ்குமார் சட்டம் சார்ந்த பிரிவில் இருந்து குழந்தைகள் நலப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் சதீஷ்குமார், இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in