அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு: விவசாயிகள் புகாரால் கலெக்டர் அதிரடி

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு: விவசாயிகள் புகாரால் கலெக்டர் அதிரடி

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய பணம் வசூல் செய்வது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள்  குறைதீர் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம், ஆகிய நான்கு தாலுக்காவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய்  முதல் 70.ரூபாய் வரை கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூட்டத்தில் பேசிய விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

விவசாயிகளின் புகாரைத் தொடர்ந்து கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிக்கப்படுவது குறித்து விவசாயிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட ஊழியரை உடனடியாக களைஎடுக்கிறேன் என்று மாவட்ட ஆட்சியர்   உறுதி அளித்தார். 

விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வசூலிக்கப்பட்டால் தற்காலிக பணிநீக்கம் முதல் அனைத்துவித ஒழுங்கு நடவடிக்கையும்  மேற்கொள்ளப்படும் என்று அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் உடனடியாக கடிதம் அனுப்ப நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும் கரவொலி எழுப்பி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in