அக். 10-ம் தேதி தனியார் மெட்ரிக் பள்ளிகள் திறக்க பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு!

அக். 10-ம் தேதி தனியார் மெட்ரிக் பள்ளிகள் திறக்க பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு!

தனியார் மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 10-ம் தேதி திறக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 1 முதல் 5-ம் வகுப்பு வரை அக்டோபர்13-ம் தேதி வரையிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அக்டோபர் 10-ம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டத்திற்கான பயிற்சி இருப்பதால் அக்டோபர் 3-ம் தேதி தொடக்கநிலை வகுப்புகளுக்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் செயல்படும் அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும் அக்டோபர் 10-ம் தேதி பள்ளிகளைத் திறக்க வேண்டும். அனைத்து வகுப்புகளும் அன்றைய தினமே தொடங்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in