கடலுக்கு சென்ற மண்டபம் மீனவர்கள் 4 பேர் படகுடன் மாயம்; தேடும் சக மீனவர்கள்: கலக்கத்தில் உறவுகள்

கடலுக்கு சென்ற மண்டபம் மீனவர்கள் 4 பேர் படகுடன் மாயம்; தேடும் சக மீனவர்கள்: கலக்கத்தில் உறவுகள்

மண்டபம் கடற்பகுதியில் இருந்து தொழிலுக்கு சென்ற மீனவர் 4 பேர் படகுடன் மாயமாகினர்.

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து, மண்டபம் ஜெயராஜ் மகன் ஆல்வின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் முருகானந்தம் (45), கண்ணன் (40), கோவிந்தசாமி (50), ஜான் (30) ஆகியோர் நேற்று காலை தொழிலுக்குச் சென்றனர். இன்று மதியம் வரை அவர்கள் கரை திரும்பவில்லை. இதனையடுத்து மாயமான மீனவர்களை சக மீனவர்கள் மற்றொரு படகில் தேடிச்சென்றனர்.

இந்நிலையில் மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனால் மீனவர்களின் உறவினர்கள் கலக்கமடைந்துள்ளனர். இது குறித்து மண்டபம் மீன்வளத்துறையினர் விசாரித்து வருகின்றனர். காற்றின் போக்கில் படகு நகர்ந்து இலங்கை கடற்பகுதியில் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in