மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழா: நாளை கொடியேற்றம்

பகவதி அம்மன் கோயில்
பகவதி அம்மன் கோயில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழா: நாளை கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மண்டைக்காடு பகவதி அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை எனவும் அழைக்கப்படுகின்றது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது ஹைந்தவ சேவா சங்கம் என்னும் அமைப்பு சமய மாநாடு நடத்திவந்தது. இம்முறை அதை அறநிலையத்துறையே நடத்தும் என அறிவிக்க சர்ச்சையானது. கடைசியில், வேறு வழியின்றி ஹைந்தவ சேவா சங்கமும், அறநிலையத்துறையும் சேர்ந்தே நடத்தும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதனால் இம்முறை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வழக்கத்தைவிடக் கூடுதல் கவனம்பெற்றது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. நாளை காலை 4.30க்கு கோயில் நடைதிறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை ஆகியவை நடக்கிறது. காலை 7.30 மணிமுதல் 8.30க்கும் கொடியேற்றம் நடக்கிறது. இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். நிகழ்வில் ஐந்தாம் நாள் மாலை யானை மீது களபம் பவனி வருதல், ஆறாம் நாளில் உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்து சந்தனக்குடம் பவனி, அன்று இரவு 11 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in