திருமணமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த நபர்: தேடிக் கண்டுபிடித்து மூக்கை அறுத்த உறவினர்கள்

திருமணம் கடந்த உறவு
திருமணம் கடந்த உறவுதிருமணமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த ஆண்: தேடிக் கண்டுபிடித்து மூக்கை அறுத்த உறவினர்கள்

ராஜஸ்தானின் அஜ்மீரில் திருமணமான பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்த ஆணின் மூக்கை அறுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகௌர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தை, பெண்ணின் உறவினர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

பர்பத்சரில் வசிக்கும் ஹமீத், கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியைச் செர்ந்த திருமணமானப் பெண்ணுடன் ஊரைவிட்டு வெளியேறி அஜ்மீரில் வசித்து வந்தார். அவர்களை தேடிக் கண்டுபிடித்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களைத் தாக்கியதோடு, ஆணின் மூக்கையும் வெட்டியுள்ளனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். " ஒரு திருமணமான பெண் தனது காதலரான ஹமீத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதை அறிந்த பெண்ணின் தந்தை, அவர்கள் இருவரையும் பிரித்தார். பின்னர் பெண்ணின் சகோதரர்கள் மற்றும் தந்தை ஹமீதின் மூக்கை வெட்டி அதை வீடியோவாக பரப்பினார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று நாகௌர் காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஜோஷி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in