17 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாயின் இரண்டாவது கணவர் கைது

17 வயது பெண்ணுக்கு  பாலியல் தொல்லை: தாயின்  இரண்டாவது கணவர் கைது

17 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பெண்ணின் தாயாரின் இரண்டாவது கணவர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனது முதல் கணவரை  பிரிந்து தனது  மகளுடன் தனியே வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவர் வேறொருவரை  இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த  இரண்டாவது கணவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வீட்டில் தனியே இருந்த  17 வயது மகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வைத்திருந்தாராம். 

இதனிடையே இளம்பெண்ணின் தாய்க்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வந்துள்ளது. இதில் கணவர் கோபம் அடைந்து வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போதுதான்  அந்த இளம்பெண் தனது தாயிடம் தனக்கு நேர்ந்ததை கூறியுள்ளார்.

இதனையடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று தனது இரண்டாவது கணவர் மீது இளம்பெண்ணின் தாய் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போக்சோ வழக்கில் இரண்டாவது கணவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in