காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்: சிறுமி வாக்குமூலத்தால் பெற்றோர் அதிர்ச்சி

கைது
கைதுகாதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்: சிறுமி வாக்குமூலத்தால் பெற்றோர் அதிர்ச்சி

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்த சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை  தேனி போலீஸார் கைது செய்துள்ளனர். 

தேனி அருகே போடேந்திபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் லிங்கேஸ்வரன் என்ற வினோத்குமார். இவர் 14 வயது சிறுமி ஒருவரிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி தனியிடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வீட்டில் இருந்த சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் தேடியுள்ளனர். சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய அந்த சிறுமியிடம் அவரது தாய் விசாரித்துள்ளார். அப்போது, அந்த சிறுமி தனக்கு நடந்த அவலத்தை தாயிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தாய் தனது மகளை கண்டித்ததுடன் கம்பால்  தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுமிக்கு தலையில் காயம் ஏற்படவே தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

இது குறித்த தகவல் அறிந்த போலீஸார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 8-ம் வகுப்பு படித்து வந்த தான் இடையில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறிய வினோத்குமார் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீஸார்  வினோத்குமார் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in