விண்வெளியில் மின்சாரம், தண்ணீர் தயாரித்து அசத்தல் - இஸ்ரோவின் மாபெரும் சாதனை!

விண்வெளியில் மின்சாரம், தண்ணீர் தயாரித்து அசத்தல் - இஸ்ரோவின் மாபெரும் சாதனை!

விண்வெளியில் மின்சாரமும், நீரும் தயாரித்து இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. பூமியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை கண்டறிந்துள்ள இஸ்ரோ, மின்சாரம் உற்பத்தி செய்து சாதித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் விண்மீன்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் (X-ray Polarimeter Satellite - XPoSat) எனும் அதிநவீனசெயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் மூலம் கடந்த ஒன்றாம் தேதி காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட் புத்தாண்டு அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. 22 நிமிட பயணத்துக்கு பிறகு, பூமியில் இருந்து 650 கி.மீ உயரம் கொண்ட குறைந்த தாழ்வட்ட சுற்றுப்பாதையில் 6 டிகிரி சாய்ந்த நிலையில் எக்ஸ்போசாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்தில் ‘போயம்’ (PSLV Orbital Experimental Module - POEM) எனும் சோதனை முயற்சியும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ‘நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டது.

ஃபியூயல் செல்
ஃபியூயல் செல்

இந்நிலையில், விண்வெளியில் மின்சார உற்பத்தி செய்ய இந்திய தொடங்கியுள்ளது. விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சாத்திய கூறுகளை கண்டுபிடித்து இஸ்ரோ சாதனை செய்துள்ளது. பூமியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை கண்டறிந்துள்ள இஸ்ரோ, மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் விண்வெளியில் சூரிய ஒளி இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்ய செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதால் மின்சாரம் மட்டுமின்றி தூய நீர் மற்றும் வெப்பத்தையும் பெற முடியும்.

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் அனுப்பிய ஃபியூயல் செல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபியூயல் செல் கருவி இயக்கப்பட்டு 100 வாட் மின்சாரம் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளன. இந்நிலையில் இந்தியா முதல் முறையாக விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in