ராமேஸ்வரத்தில் பயங்கர விபத்து; ஆன்மிக சுற்றுலா வந்த மகாராஷ்டிரா பக்தர்கள் பலி: ஆட்டோ டிரைவர் கைது

ராமேஸ்வரத்தில் பயங்கர விபத்து; ஆன்மிக சுற்றுலா வந்த மகாராஷ்டிரா பக்தர்கள் பலி: ஆட்டோ டிரைவர் கைது

தனுஷ்கோடி அருகே விபத்து ஏற்படுத்தி மகாராஷ்டிரா சுற்றுலா பயணிகளை உயிரிழப்பு செய்த ராமேஸ்வரம் ஆட்டோ டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 90 பேர் இரண்டு பஸ்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆன்மிக சுற்றுலாப் பயணம் புறப்பட்டனர். நேற்று முன்தினம் கன்னியாகுமரி சென்றுவிட்டு நேற்று காலை ராமேஸ்வரம் வந்தனர். அக்னி தீர்த்தக்கடலில் நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதன்பின் பின்னர், தனுஷ்கோடிக்கு வாடகை ஆட்டோக்களில் சென்றனர். அரிச்சல்முனை, தனுஷ்கோடி கடல் அழகை ரசித்து விட்டு, மீண்டும் ராமேஸ்வரம் திரும்பினர். ஜடாயு தீர்த்தம் பகுதியில் வந்தபோது சாலை ஓரம் நின்ற ஆட்டோ மீது மகாராஷ்டிரா பக்தர்களை ஏற்றிவந்த ஆட்டோ மோதியது.

இதில் ஆட்டோவில் பயணி்த்த மகாராஷ்டிரா பீடே மாவட்டம் ஏக்நாத் நகரைச் சேர்ந்த அசோக் டாங்கே (62), மங்கள் பாய் தேஷ் பாண்டே் (78)) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். குல்கர்னி ஆனந்த் என்பவர் லேசான காயமடைந்தார்.

விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு செய்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவுரங்காபாத் ஜோதி நகரைச் சேர்ந்த சதீஷ் மசல்கர் புகார் அளித்தார். இதனடிப்படையில், ராமேஸ்வரம் ஆட்டோ டிரைவர் அழகு மணிகண்டன் மீது 3 பிரிவுகளின் கீழ் தனுஷ்கோடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதன்படி டிரைவர் அழகு மணிகண்டன் (25) கைது செய்யப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in