கரோனா பாதிப்புக்கு மத்தியில் திறக்கப்பட்டது பள்ளிக்கூடம்!

பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வந்த மாணவர்கள்
மும்பையில் திறக்கப்பட்டது பள்ளிக்கூடம்
மும்பையில் திறக்கப்பட்டது பள்ளிக்கூடம்ANI

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மும்பையில் 16 நாள் இடைவெளிக்கு பிறகு அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிராதான். தலைநகர் மும்பையில் நோய் பரவல் உச்சத்தை தொட்டயுள்ளது. இதன் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த டிசம்பரில்தான் திறக்கப்பட்டன. இந்த நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக கடந்த 8ம் தேதி மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள் 16 நாள் இடைவேளிக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளன. 1 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமல்லாது மழலையர் வகுப்புகளுக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளிக்கு வந்த மாணவர்கள்
பள்ளிக்கு வந்த மாணவர்கள்ANI

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், "கட்டாயம் பள்ளிக்கு வருமாறு யாரையும் நிர்பந்திக்கவில்லை. புனே மற்றும் அவுரங்காபாத்தில் நோய் பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதே போன்று சில பகுதிகளில் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாவட்ட மாநகராட்சி நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in