அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்; அலறியடித்து ஓடிய மக்கள்: அந்தமானில் பயங்கர நிலநடுக்கம்!

நிலநடுக்கம்
நிலநடுக்கம்அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்; அலறியடித்து ஓடிய மக்கள்: அந்தமானில் பயங்கர நிலநடுக்கம்!

அந்தமானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக்கொண்டு வீதிக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

அண்மையில் துருக்கி, சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in