டாஸ்மாக் நேரம் குறைப்பு... மதுபானம் வாங்க ஐடி கார்டு கட்டாயம்... ஐகோர்ட் கிளை அதிரடி!

அரசு மதுபானக் கடை
அரசு மதுபானக் கடை

அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானக் கடைகளில் மதுபானம் விற்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை அரசுக்கு  அதிரடி உத்தரவிட்டுள்ளது

மது விற்பனை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை  குறைத்து அரசு அறிவிக்கவேண்டும். இதை மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த உத்தரவை 8 மாத காலமாக அமல்படுத்தவில்லை என்றும், இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.கே. ரமேஷ், என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, மது வாங்குவோருக்கு அரசின் அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in